செவ்வாய், 4 ஜூன், 2019

அலகு 1 ,பொருளியலில் முக்கிய வினாக்களும் விடைகளும் - உத்திகளும் - பாகம்1

கவனக்கலைப்பானுக்குள் சிக்காமல் விடைகளை தெரிவு செய்ய மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

1-ஒருமை விடையா/ஒரு விடையா?
2-பன்மை விடையா/ பல விடையா?
கண்டுபிடிப்பது எப்படி??? உதாரணம்

ஒரு விடைக்குரிய சொற்களின் முடிவிடங்கள்

இயல்பு,எது, காரணி,சூழ்நிலை,யாது,சரியான கூற்று,தொடர்பு,என்ன...

ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் வருவதற்கான முடிவிடங்கள்
இயல்புகள்,யாவை,எவை,காரணிகள்,சூழ்நிலைகள்,கூற்றுக்கள்,தொடர்புகள்

மாணவர்கள் வினாவினை வாசிக்கும் போது உங்களது அடிப்படை தமிழ் அறிவினை வைத்து கிரகிக்க வேண்டும் உதாரணமாக ,எது? எவை? எனபனவற்றை சரியாக புரிய வேண்டும்.
எது என கேள்வி கேட்கப்பட்டால் 1 விடை மட்டுமே சரியாக அமையும்.அதில் குழம்பக்கூடாது.எவை எனக் கேட்க்கப்பட்டால் 1ற்கு மேற்பட்ட விடைகள் சரியானவையாக அமையும்.

பூச்சிய அமையசெலவுக்கான காரணிகள் எவை?
உண்மையில் 3 நிலமைகளில் இது நடைபெறும்.

1-மாற்றுப்பயன்பாடு அற்ற நிலையில்,அதாவது தெரிவு அற்ற நிலையில்,அதாவது ஒரு பொருள் மட்டும் இருக்கின்ற நிலமையில்.

2-வளங்களின் அருமை தன்மை அற்ற பொருட்கள் தொடர்பில்,அதாவது இலவசப்பொருட்களுக்கு

3-வேலையின்மை குறைகின்ற போது,அதாவது வேலையின்மை குறைகின்றா போது ,ஏற்கனவே இருந்த வேலயின்மையின் புள்ளியானதுகொஞ்சம் உயர்வான புள்ளிக்கு செல்லும் .எனவே இரு பக்கமும் இழப்புக்கள் இருக்காது அதாவது X;Y 2பொருட்களுக்கும்