பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானமாக கருதப்படுகிறது?
பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
சமூக விஞ்ஞானங்கள் மனித நடத்தைகளை பற்றி ஆய்வு செய்கின்றன,பொருளியல் மனிதனின் பொருளாதார நடத்தை பற்றி ஆய்வு செய்கின்றது.எனவே பொருளியல் சமூக விஞ்ஞானம் ஆகும்.அது மட்டுமன்றி பொருளியலில் இருக்கின்ற ஆய்வுமுறைகள்
1. பொருளியல் ஆய்வு முறைகள் (Methods of Economic Analysis)
பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகள் உள்ளன.
1, பகுத்தாய்வு முறை (Deductive)
2, தொகுத்தாய்வு முறை (Inductive Method)பகுத்தாய்வு முறையை, பகுத்தறியும் முறை என்றும், (Analytical) கருத்தியலான முறை (Abstract) என்றும் கூறுவதுண்டு. இது முன்நிலைச் சார்பு முறையைச் சார்ந்தது. சில அடிப்படை எடுகோள்களிலிருந்து முடிவுகள் பெறப்படுகின்றன. கிரேக்கர்களிடையே இம்முறை மிகவும் பிரபலமானது.
பகுத்தாய்வு முறையானது. பொதுக்கருத்திலிருந்து தனிக் கருத்தைப் பெறுவது ஆகும். தொன்மைப் பொருளியல் அறிஞரான ரிகார்டோ பகுத்தாய்வு முறையைப் பின்பற்றினார்.
தொகுத்தாய்வு முறையானது (Inductive Method) தனிக் கருத்திலிருந்து பொதுக் கருத்தைப் பெறுவதாகும். டார்வினின் தொகுத்தாய்வு, பகுத்தாய்வு முறைகளின் முக்கிய கருத்துக்களாவன
1, பிரச்சனைகளை அறிதல் (Identification) 2, அனுமானங்களை உருவாக்குதல் 3. புள்ளி விவரங்களைச் சேகரித்தல், தொகுத்தல், ஆராய்தல்4. முடிவுகளைப் பெறுதல். 5, சரிபார்த்தல், நீக்குதல், அல்லது திருத்தி அமைத்தல்
2. பொருளியல் ஏனைய சமூக விஞ்ஞானங்களோடு தொடர்புபஉதுகின்றது.,
உதாரணம் அரசியல் ,அரசியல் பொருளாதாரம்,சமூகவியல்,உளவியல்,பொருளாதார உளவியல்
3. மற்ற சமூக அறிவியல்களைப் போன்று பொருளியலும் அதற்குரிய விதிகளைக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், கொடுக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு, என்ன நடக்கவேண்டும் என்று கூறும் கூற்றே விதியாகும். நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு விளைவை ஏற்படுத்தும்.
உதாரணம் .- விலை கூடும் போது கேள்வி தொகை குறையும்
4. சராசரி மனித நடவடிக்கைகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம்
பொருளியல் விதிகள் இயல்பியல் விதிகளைப் போன்று துல்லியத்தன்மை உடையன அல்ல. ஆனால் சராசரி மனித நடவடிக்கைகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.அதாவது சராசரி தனி நபர் வருமானம் எவ்வாறு ஒரு நபரின் பொருளாதார நடத்தையினை தீர்மானிக்கும்,வறுமைக்கோடு மற்றும் அரசின் பொருளாதார நடத்தை என்பன எவ்வாறு அமையும் என தீர்மானிக்கும்.
5. அளவியில் பொருளாதாரம் (Econometrics) என்ற புதிய அறிவியல் பாடப்பகுதி பொருளியலில் பிரிவில் உள்ளது. புள்ளியியலையும், கணித இயலையும் பயன்படுத்துகிறோம்
உதாரணமாக அட்டவனைகள்,கணித சமன்பாடுகள்
Qdx=f(Px)
6. எதிர்வுகூறல்களினை மேற்கொள்ளல்.
உதாரணம்,அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையின் வறுமை நிலை இல்லாதொழிக்கபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக