வியாழன், 30 மே, 2019

1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்

1. இதனை கற்பதனால் ,எப்படி பொருளாதார ரிதியான முடிவுகளினை மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டுகின்றது
2. சமூகத்தினை புரிந்துகொள்ள உதவியாயிருக்கிறது
3. உலகலாவிய நிறுவனங்களின் ,அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகளினை அறிய ,விளங்கிக்கொள்ள உதவுகின்றாது
4. ஒரு அறிவார்ந்த நாட்டுப்பிரஜையாக வாழ உதவுகின்றாது.
5. ஏனெனில் ஒரு அறிவார்ந்த நாட்டு பிரஜை கட்டாயமாக பொருளியலறிவை கொண்டிருக்க வேண்டும்.

உங்களுக்கு விரும்பிய உதாரணங்களை ஓரிரு வசனங்களில் எழுதலாம்,நேரம் இருப்பின்


பொருளியலின் முக்கியத்துவம்
சமூக அறிவியலில் பொருளியியல் ஒரு முக்கியப் பிரிவாகும். நமது அன்றாட வாழ்க்கையிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. அறிவியலில் உண்மைக்கருத்தை அறிந்த கொள்ளவே முனைகிறோம். ஆனால் பொருளியல், உண்மை நிலை அறிந்து கொள்ள மட்டுமில்லாமல், சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயல்கிறது.
அறிவை அறிவிற்காக மட்டுமே பயில்வது பொருளியல் அறிஞர் களின் நோக்கமல்ல. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே பொருளியலின் முக்கியக் குறிக்கோளாகும். பொருளியல் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு பொருளியல் அறிஞர்களிடம் கிடையாது. ஆனால் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் அரசுக்கு அவர்கள் உதவி செய்ய முடியும்.
"பொருளாதாரக் கோட்பாடுகள், கொள்கை முடிவிற்கு உடனடியாக ஏற்கக்கூடிய, தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கூறுவது இல்லை. இது ஒரு வழிமுறையே, இது மனதிற்கு ஒரு சாதனம். சிந்தனைக்கு ஒரு நுட்பம். இதனைப் பெற்றிருப்பவர்கள் இதன் மூலம் ஒரு சில சரியான முடிவுகளைப் பெற உதவுகிறது" என்று கீன்சு கூறுகின்றார்.
நவீன அரசின் பல பிரச்சனைகள் பொருளியல் தன்மையுடையன. அரசின் பிரச்சனைகளில் பொருளியல் அறிஞர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியின் பொருளாதாரம் பெரும்பாலும் சீர்குலைக்கப்பட்டது. இங்கு பணவீக்கம், பண்டங்களின் பற்றாக்குறை, மிகை வேலையின்மை (Mass unemployment) நிலவியது. 'லுட்விக் எராட்' (Ludwig Erhard) என்ற பொருளியல் அறிஞரின் அறிவுரையைப் பின்பற்றியதால் ஜெர்மானியப் பொருளாதாரம் வேகமாக மீட்சி அடைந்தது. ஜெர்மனியின் பொருளாதார மீட்சி ஒரு பொருளியல் அதிசயமாகும். (Miracle)
அதே போன்று 1930இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து அமெரிக்க அரசு மீட்சி பெற J,M, கீன்சின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கிய பங்காற்றின.
விலை, வாரம், கூலி, வட்டி, லாபம், வரிகள் முதலியவை பற்றி பொருளியல் கூறுகிறது. ஒவ்வொருவரையும் இது ஏதாவது ஒரு வழியில் பாதிக்கிறது. எனவேபொருளியல் அறிவு சிறிதளவேனும் இல்லாத ஒருவன் உண்மையான குடிமகனாக இருக்கமுடியாது" என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக