வியாழன், 30 மே, 2019

1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்

ஆல்ஃபிரடு மார்ஷலின் (1842-1924) நல இலக்கணம் (Welfare Economics)

1890 ஆம் ஆண்டு ஆல்ஃபிரடு மார்ஷல் பொருளாதார கோட்பாடுகள்' என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் அன்றாட வாழ்க்கையில் மனித இனத்தைப் பற்றிப் பொருளியல் ஆராய்கிறது என்று வரையறுத்துள்ளார்
. "சாதாரண மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது”

பொருளியல் செல்வத்தைப் பற்றி ஆராய்கிறது என்பதை மார்ஷல் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் பொருளியல் செல்வத்தைப் பற்றி மட்டுமே ஆராய்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பொருளியல் ஒரு பக்கம் செல்வத்தைப் பற்றியும், அதைவிட முக்கியமாக மற்றொரு பக்கம் மனிதனைப் பற்றியும் ஆய்வு செய்கின்ற இயல். அவருடைய மையக் கருத்து மனிதனைப் பற்றியதே. செல்வத்தைப் பற்றி ஆராய்வதைவிட மனிதனைப் பற்றி ஆராய்வதே இன்றியமையாததாக கருதுகின்றார்.
பொருளியல் மனித இனத்தின் அனைத்து நடவடிக்கை களையும் ஆராயவில்லை . மனிதனை வாங்குபவர் -விற்பவராகவும், உற்பத்தியாளர்-நுகர்வோராகவும், சேமிப்பாளர்- முதலீட்டாளராகவும், முதலாளி-தொழிலாளியாகவும் “பொருளியல் ஆராய்வதாக கெயின்கிராஸ், (Caincross) கூறுகின்றார்.
மக்கள் வருமானத்தை எவ்வாறு பெறுகிறார்கள். அவற்றை எவ்வாறு, பயன் படுத்துகிறார்கள், வளங்களை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் உபயோகப் படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது.
“பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது” என்பதைப் பற்றி, ஆராய்கிறது. பொருள்சார் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால், பொருள்சார் நல இயலாக பொருளியல் ஆயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக