வியாழன், 30 மே, 2019

1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்) (Lionel Robbins Scarcity Definition):

இலயனல் ராபின்ஸ் அவர்கள் பொருளியலுக்கு கீழ்கண்டவாறு இலக்கணம் வரையறுத்துள்ளார்.

"விருப்பங்களோடும், கிடைப்பருமையுள்ள, மாற்று வழிகளில் பயன் படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கை களைப்பற்றி பயிலுகின்ற அறிவியலே பொருளியலாகும்".
பேராசிரியர் இலயனல் ராபின்சன் “பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை”



என்ற தமது நூலில் (1932) மேற்கண்டவாறு இலக்கணம் தந்துள்ளார். இராபின்ஸ் இலக்கணத்தின் அடிப்படை இயல்புகள் கீழ்க்கண்டவாறு 1, இலக்குகள் பல வகைப்படும். இலக்குகள் என்றால் மனித விருப்பங்கள்

என்று பொருள்படும் மனித விருப்பங்கள் எண்ணற்றவை. )
2, வளங்கள் வரையறைக்குட்பட்டவை. காலம், பணம், வளங்கள் ஆகியவை
வரையறைக்குட்பட்டவை காலம், பணம் ஆகியவற்றை நாம் மாற்று வழிகளில் பயன்படுத்தலாம். (உ.ம்.) நேரம் வரையறைக்குட்பட்டதாக இருப்பினும் அதை நாம் பல காரணங்களுக்குப் பயன்படுத்து கிறோம். பணம் ஈட்டுவதற்காகவோ
அல்லது ஓய்வெடுக்கவோ நேரத்தை நாம் பயன்படுத்தலாம்.
 4. எல்லா விருப்பங்களும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.
இங்கு சில கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டும். நிறைய விருப்பங்களில் பொருளியல் அறிஞர்களே ஆர்வம் காட்டுவதில்லை.

மற்றொரு எடுத்துக்காட்டாக, 'போர்', பொருள் சார் நலனை உயர்த்துவது இல்லை. ஆனால் போரைப்பற்றிய பொருளாதாரம் நமது இயலில் உண்டு , பொருளியலில் இது ஒரு முக்கிய பிரிவாகும். போருக்கு பல பொருளாதார பிரச்சனைகள் காரணமாகும். அரசியல், சமூக காரணங்களைவிட பொருளியல் காரணமே மிகவும் முக்கியமானதாகும். ஆகவே பொருளியல் பொருள்சார் நலனை உயர்த்துவது என்பது பொருந்தாது.
இரண்டாவதாக சில பொருளியல் நடவடிக்கைகள் நலனை உயர்த்துகின்றன, ஆனால் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. எடுத்துக்காட்டாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோரின் பணிகள் நமது நலனை உயர்த்துகின்றன. ஆனால் அவர்களுடைய பணிகள் பருப்பொருள்களை உற்பத்தி செய்வது இல்லை, பொருள்சார் நல இலக்கணத்தின்படி இவர்களுடைய நடவடிக்கைகள் பொருளியல் நடவடிக்கைகளாக கருதப்படுவது இல்லை. ஏனெனில் இவர்களுடைய பணிகள் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. இவர்களுடைய பணிகளைப் நாம் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் அதிக விலை கொடுத்து இவர்களது பணிகளைப் பெறுகிறோம். இவர்களது பணிகளுக்கு பொருளியலில் மதிப்பு உண்டு. பொருள்சார் நலனுக்கான காரணங்களைப்பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறுவது தவறான வழிகாட்டுதலாகும். பொருளாதாரம் எதைச் சார்ந்து இருப்பினும் உறுதியாக, பருப்பொருள் நலன்பற்றிய செயல்களைச் சார்ந்தது அன்று என்பது ராபின்ஸின் அசைக்க முடியாத கருத்தாகும்.
மூன்றாவதாக மார்ஷலின் இலக்கணம் பகுப்புக்களின் (classificatory) அடிப்படையில் அமைந்துள்ளது. இது பகுத்தாய்வின் (analytical) அடிப்படையில் அமையவில்லை, பருப்பொருள்களின் உற்பத்தி எடுத்துக்காட்டாக நாற்காலி, மேசை, மிதிவண்டி, ஊர்தி, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரொட்டி போன்றவை மட்டுமே பொருளியல் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. ஆசிரியர் அல்லது நீதிபதி பணிகள் பருப்பொருள்களை உற்பத்தி செய்யாததால் இவர்களின் பணிகள் பொருளியல் நடவடிக்கையாக கருதப்படுவது இல்லை. இது தவறான கருத்தாகும். உருளைக்கிழங்கு உற்பத்தி பொருளியல் நடவடிக்கை என்றும், தத்துவப்படைப்பு பொருளியல் நடவடிக்கை அல்ல என்றும் நாம் கூறுவதில்லை' என்று இலயனல் ராபின்சன் கூறுகின்றார்.
இறுதியாக 'நலம்' என்ற நீதிக்கருத்தினை அறிமுகப் படுத்தும்போது, பொருளியல் ஒரு துல்லியத்தன்மையற்ற அறிவியலாகும். பொருள்சார் நலனை

உதாரணமாக இருவகையான விருப்பங்களை நிறைவேற்ற தேவையான நேரமும், வளங்களும் இருக்கும்பொழுது அவற்றை நாம் அரிதாக பயன்படுத்த வேண்டியதில்லை. வளங்கள் வரையறைக்குட்டதாக இருப்பினும், அவை மாற்றுப் பயன்பாடு இல்லாதவையாக இருப்பின் நாம் அதையும் அரிதாக பயன்படுத்த வேண்டியது இல்லை. மேலும் எல்லா விருப்பங்களும் சமமுக்கியத்துவம் உடையவையாக இருப்பின் எதையும் நாம் அரிதாக பயன்படுத்த வேண்டியது இல்லை. காலம் வரையறைக்குட்பட்டது. ஒரு நாளைக்கு 24 மணிநேரமே உள்ளது. தொழிலாளி பணத்தைப் பெற மட்டுமே விரும்பினால், அதிக நேரம் வேலை செய்யவேண்டும். ஒய்வெடுப்பதைத் துறக்க வேண்டும். ஓய்வெடுக்க விரும்பினால் வருமானத்தை துறக்கவேண்டும் இரண்டையும் ஒரே நேரத்தில் பெறமுடியாது.
மனித விருப்பத்தை நிறைவு செய்யும் அனைத்து வளங்களும் பற்றாக்குறையானவை அல்ல. (உ.ம்) காற்று, சூரிய ஒளி ஆகியவை மிக அதிக அளவில் கிடைக்கின்றன. அவைகள் இலவசப் பண்டங்கள் ஆகும். ஆனால் நாம் விரும்பும் பண்டங்கள் நமது விருப்பங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்பொழுது பற்றாக்குறையாக உள்ளன. எண்ணற்ற விருப்பங்களோடும், பற்றாக் குறையான வளங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது என்பது தெளிவாகிறது. வளங்கள் வரையறைக்குட்பட்டு இருப்பதால் நாம் அவற்றிற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது. பற்றாக்குறையான பண்டங்களின் விலைகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பதைப் பொருளியலில் நாம் பயிலுகிறோம். பல வகையான விருப்பங்களில் ஒன்றைத் தெரிவு செய்தல் வேண்டும். ஆகவே பற்றாக்குறையும், தெரிவு செய்தலும் பொருளியலின் மைய கருத்தாகும். எனவே பொருளியல் தெரிவுசெய்யும் அறிவியல் ஆகும்.
மாற்றுப்பண்டங்களிடையே தெரிவு செய்தல் பொருளியலின் அடிப்படைக் கருத்தாகும். இது முதலாளித்துவம், சமதர்மம், கலப்புப் பொருளாதாரம் ஆகிய எல்லா பொருளாதார அமைப்புக்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். )
முதலாளித்துவ பொருளாதாரம் அங்காடிப் பொருளாதாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நுகர்வோருக்கு சமதர்ம பொருளாதாரம் அல்லது கட்டளைப் பொருளாதாரத்தைவிட தெரிவு செய்யும் வாய்ப்புகள் அதிகம். சமதர்ம பொருளாதாரம் திட்டமிட்ட பொருளாதாரமாகும். அனைத்து அடிப்படை தீர்வுகளும் அரசால் தீர்மானிக்கப்படுவதால் நுகர்வோருக்கு இங்கு தெரிவு செய்யும் வாய்ப்பு குறைவாக இருக்கும். அடுத்து கலப்புப் பொருளாதாரம்.
இலக்கை கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கலப்புப் பொருளாதாரத்தில் அரசு பொதுத் துறையும், தனியார் துறையும் முக்கியப் பங்காற்றுகின்றன. சில துறைகளில் நுகர்வோருக்கு தெரிவு செய்வதில் வாய்ப்புகள் அதிகமாகவும், அரசு அதிக கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள பல துறைகளில் நுகர்வோர் தெரிவு செய்யும் வாய்ப்புகள் குறைவாகவும் உள்ளது. ஆனால் எல்லா வகையான அமைப்புகளிலும் திட்டமிடுதல் உண்டு. ஆனால் திட்டமிடுதலின் தன்மையில் மாறுபாடு உள்ளது. திட்டமிடுதல் என்பது குறிகோளுடன் தேர்ந்தெடுத்தலும், தெரிவு செய்தலும் பொருளியல் நடவடிக்கைகளின் சாராம்சமுமாகும். குறைபாடுகள்
மனித நடவடிக்கைகளைப் பொருளியல்சார்ந்த நடவடிக்கைகள், பொருளியல் சாரா நடவடிக்கைகள் என்று இருவகையாக மார்ஷலின் இலக்கணம் வகைப்படுத்துகிறது. பொருள்சார் நலனை உயர்த்தும் நடவடிக்கைகள் பொருளியல் நடவடிக்கைகளாக மார்ஷல் கருதுகிறார். ஆனால் இராபின்சனின் இலக்கணம் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக ஆராய்கிறது. தேவையோடு ஒப்பிடும்போது ஒரு பொருள் பற்றாக்குறையாக இருப்பின் அதுவே பொருளியலின் பாடப் பொருளாகும். அந்த வகையில், வழக்குரைஞர், மருத்துவர், நடிகர்கள் ஆகியோர்களின் உழைப்பும் பொருளியலின் பாடப்பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இராபின்சனின் இலக்கணப்படி பொருளியல் ஒரு அறிவியலாகும். பொருளியலின் பிரச்சனைகளில் அறநெறிக் கருத்துக்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, வேறு வகையில் கூறுவோமானால் இது ஒழுக்கநெறிக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டது. பொருளியலுக்கும், சமுதாய நலத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்த இது முயற்சிக்கவில்லை. ஆனால் சில பொருளியல் அறிஞர்கள் இக்கருத்தை குறை கூறியுள்ளனர். அவர்களின் கருத்துப்படி, இது சமூக அறிவியலாக கருதப்படுவதால், மனித நலத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும். இராபின்சின் இலக்கணத்தில் மனிதத்துவம் காணப்படவில்லை என்று குறை கூறுகின்றனர். விலைத் தீர்மானம் பற்றிய அறிவியலாகவே இது பொருளியலை காண்கிறது. ஆனால் பொருளியலானது மதிப்புக் கோட்பாடு அல்லது வளங்களின் பங்கீட்டை விட கூடுதலானது.
பொருளியல் பிரச்சனைகள் பற்றாக்குறையினாலேயே எழுகிறது என்பது இராபின்சனின் கருத்தாகும். ஆனால் இப்பிரச்சனைகள் பண்டங்களின்
ஏராளமான அளிப்பினாலும் தோன்றும். எடுத்துக்காட்டாக 1930ல் ஏற்பட்ட பொருளியல் மந்தம் ஏராளமான அளிப்பினால் தோன்றியதே அன்றி பற்றாக்குறையினால் அல்ல. எனவேதான் உலகப் பொருளாதார மந்தம் | 'செழுமையில் வறுமை' என்று வருணிக்கப்படுகிறது. மேற்கண்ட குறைபாடுகள் இருப்பினும், இராபின்சனின் இலக்கணத்தைப் பல பொருளியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனெனில் இது பற்றாக்குறை, தெரிவு ஆகிய வாழ்க்கையின் இரு முக்கிய கருத்துக்களையும் வற்புறுத்துகிறது.
தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக உற்பத்தி முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் எப்பொழுதும் பற்றாகுறை நம்மிடயே உள்ளது. எனவே தான் பொருளியல் பற்றாக்குறை அறிவியலாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக