“பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்”, 1776 ஆம் ஆண்டில் "தேசங்களின் செல்வம்” என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
அவர் அரசியல் பொருளியலின் தந்தை எனப்படுகிறார். ஏனெனில், இவரே முதன்முதலில் அனைத்துப் பொருளியல் கருத்துக்களையும் முறையாக ஒருங்கிணைத்தவர் ஆவார். அடம் ஸ்மித்துக்குப் பிறகே பொருளியலை நாம் முறைபடுத்தப்பட்ட அறிவியலாகப் பயில்கிறோம்.
பொருளியலில் 'செல்வம்' சிறப்பிடத்தைப் பெறுகிறது. பொதுவாக செல்வம் என்பது பணத்தைக் குறிக்கும். பொருளியலில் மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் செல்வம்' எனப்படும். ஆனால், மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் செல்வமாகக் கருதப்பட மாட்டா என்பதை
மனதில் கொள்ள வேண்டும். (எ.கா.) காற்றும் சூரியஒளியும் நமக்கு அத்தியாவசியமானவை. அவையின்றி நாம் வாழ இயலாது. ஆனாலும் அவை செல்வமாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை அளவற்ற அளிப்பு கொண்டவை. ஓரளவு பற்றாக்குறையும் பணமதிப்பு உள்ள பண்டங்கள் அனைத்தும் செல்வமாகக் கருதப்படுகின்றன.
நாம் செல்வத்தின் நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு என்பனவற்றைப் பயில்கிறோம். “செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல்' என்று ஜே.எஸ்.மில் பொருளியலை வரையறை செய்கிறார். செல்வத்தை அடைவதிலும், அதனைப் பயன்படுத்துவதிலும் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி அறிவதே பொருளியல்' என்னும் கருத்தை ஆதம் ஸ்மித் கொண்டிருந்தார். அனைத்து நாடுகளும் செல்வத்தை எவ்வெவ்வழியில் பெருக்கிக் கொள்வது என்பதைப் பற்றி அறிவதில் அவர் நாட்டம் கொண்டிருந்தார்.
குறைபாடுகள்
ஆதம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தில் பல குறைபாடுகள் உள்ளன. பொருளியலுக்கு இவர் இலக்கணம் தரவில்லை. கார்லைல், ரஸ்கின் போன்ற சமூக அறிவியலாளர்கள் பொருளியலை “மகிழ்வற்ற அறிவியல்” என்றும் “இருண்ட அறிவியல்” என்றும் அழைத்தனர். ஆனால் அது நியாயமற்றது. ஏனெனில் பொருளியலின் தன்மையும், எல்லையும் தவறாக உணரப்பட்டது. இவ்விலக்கணம் செல்வத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை அவர்கள் பணத்தைப் பற்றிய கருத்தாக எண்ணிக் கொண்டார்கள். மக்கள் பணம்
திரட்டுதல் மட்டுமே தலையாய நோக்கமென பொருளியல் விளக்கியதாக ரஸ்கின் மற்றும் கார்லைல் முடிவுக்கு வந்தனர். செல்வந்தர்களாவதையே குறியாகக் கொண்டிருந்த தால் - பொருளியலை இவர்கள் ஒரு சுயநல அறிவியல்' என்று அழைத்தனர்.
மேற்கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. பொருளியலில் செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிப்பது அன்று. இது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பற்றாக்குறையான பண்டங்களை குறிக்கும். அது மட்டுமின்றி தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் “செல்வம்' என்ற பதத்தை 'நலம்' என்றே பொருள் கொண்டனர்.
செல்வத்திற்கு அதிக முக்கியத்துவத்தை ஆதம் ஸ்மித் அளித்தார் என்பதே மிகப்பெரிய பொருளியலில் செல்வத்தைப் பற்றி அறிந்துகொள்ளுதல் அவசியம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை . ஆயினும் அதைவிடவும் முக்கியமானது மனிதனைப் பற்றி அறிந்து கொள்ளுதலே! செல்வத்தைவிட, மனித இனத்தின் நடவடிக்கையைப் பற்றிப் பயிலுகின்ற அறிவியலே பொருளியல்.
ஆதம் ஸ்மித்தின் பொருளியல் இலக்கணத்தைப் பற்றி விவாதிக்கும்போது அவர் வாழ்ந்த காலத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவர், இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இந்நூலை எழுதியுள்ளார். இங்கிலாந்தில் தொழிற்புரட்சி பெருமளவு முதலீட்டினாலும், பேரளவு இயந்திரங்களின் பயன்பாட்டினாலும், பேரளவில் செல்வத்தை உற்பத்தி செய்ய வழிவகுத்தது. எனவேதான் ஆதம் ஸ்மித் செல்வத்தை முக்கியத்துவப்படுத்தி “நாடுகளின் செல்வமும் அதன் இயல்பும் காரணங்களும் (Causes) பற்றிய ஓர் ஆய்வு” என்ற நூலை வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக