வியாழன், 30 மே, 2019

1.1.C.2,.ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் ஏன் சிறந்தது ?

ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது என்றால் மிகையாகாது. சமூகப் பிரச்சனைகளுக்கு இது முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல் ஆகும். அது மட்டுமன்றி, செல்வத்துக்கும் பொருள்சார் நலனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பொருளியல் ஓர் அறிவியல். அது பொருள்சார் நலனைப் பற்றியது என்ற மார்ஷலின் மையக் கருத்தை இலயனல் இராபின்ஸ் கடுமையாக குறை கூறினார். அரசியல் பொருளாதாரத்தை தவறாக கையாண்டுள்ளதாக மார்ஷலை இராபின்ஸ் குறை கூறுகின்றார்.
1. முதலாவதாக பொருள்சார் நலனை உயர்த்தும் நடவடிக்கைகளை மட்டும் பொருளியல் ஆராய்கிறது. ஆனால் பல நடவடிக்கைகள் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. ஆனால் அவை பொருளியல் நடவடிக்கைகளாக

மற்றொரு எடுத்துக்காட்டாக, 'போர்', பொருள் சார் நலனை உயர்த்துவது இல்லை. ஆனால் போரைப்பற்றிய பொருளாதாரம் நமது இயலில் உண்டு , பொருளியலில் இது ஒரு முக்கிய பிரிவாகும். போருக்கு பல பொருளாதார பிரச்சனைகள் காரணமாகும். அரசியல், சமூக காரணங்களைவிட பொருளியல் காரணமே மிகவும் முக்கியமானதாகும். ஆகவே பொருளியல் பொருள்சார் நலனை உயர்த்துவது என்பது பொருந்தாது.
.
இரண்டாவதாக சில பொருளியல் நடவடிக்கைகள் நலனை உயர்த்துகின்றன, ஆனால் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. எடுத்துக்காட்டாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோரின் பணிகள் நமது நலனை உயர்த்துகின்றன. ஆனால் அவர்களுடைய பணிகள் பருப்பொருள்களை உற்பத்தி செய்வது இல்லை. பொருள்சார் நல இலக்கணத்தின்படி இவர்களுடைய நடவடிக்கைகள் பொருளியல் நடவடிக்கைகளாக கருதப்படுவது இல்லை. ஏனெனில் இவர்களுடைய பணிகள் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. இவர்களுடைய பணிகளைப் நாம் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் அதிக விலை கொடுத்து இவர்களது பணிகளைப் பெறுகிறோம். இவர்களது பணிகளுக்கு பொருளியலில் மதிப்பு உண்டு. பொருள்சார் நலனுக்கான காரணங்களைப்பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறுவது தவறான வழிகாட்டுதலாகும். பொருளாதாரம் எதைச் சார்ந்து இருப்பினும் உறுதியாக, பருப்பொருள் நலன்பற்றிய செயல்களைச் சார்ந்தது அன்று என்பது ராபின்ஸின் அசைக்க முடியாத கருத்தாகும்.
.
மூன்றாவதாக மார்ஷலின் இலக்கணம் பகுப்புக்களின் (classificatory) அடிப்படையில் அமைந்துள்ளது. இது பகுத்தாய்வின் (analytical) அடிப்படையில் அமையவில்லை. பருப்பொருள்களின் உற்பத்தி எடுத்துக்காட்டாக நாற்காலி, மேசை, மிதிவண்டி, ஊர்தி, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரொட்டி போன்றவை மட்டுமே பொருளியல் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. ஆசிரியர் அல்லது நீதிபதி பணிகள் பருப்பொருள்களை உற்பத்தி செய்யாததால் இவர்களின் பணிகள் பொருளியல் நடவடிக்கையாக கருதப்படுவது இல்லை. இது தவறான கருத்தாகும். 'உருளைக்கிழங்கு உற்பத்தி பொருளியல் நடவடிக்கை என்றும், தத்துவப்படைப்பு பொருளியல் நடவடிக்கை அல்ல என்றும் நாம் கூறுவதில்லை' என்று இலயனல் ராபின்சன் கூறுகின்றார்.
.
இறுதியாக 'நலம்' என்ற நீதிக்கருத்தினை அறிமுகப் படுத்தும்போது, பொருளியல் ஒரு துல்லியத்தன்மையற்ற அறிவியலாகும். பொருள்சார் நலனை
அளவிடுதல் கடினமான ஒன்று. சில மக்களின் நலனை உயர்த்தும் பொருளாதார கொள்கைகள் பல மக்களின் நலனை பாதிக்கும்.
மேற்கண்ட குறைபாடுகள் இருந்தபோதும், செல்வம், மனிதன், மனிதநலம் ஆகியவற்றின் தொடர்புகளை மார்ஷல் விளக்கியதன் மூலம் பொருளியலின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக