1.2.3.1-உற்பத்திக்கு
பயன்படும் உள்ளீடுகள் அனைத்தும் உற்பத்தி வளங்கள் ஆகும்.
பொருளியலில்
இவை இரு வகைப்படும்.
1.
பொருளாதார
வளம்
2.
பொருளாதாரம்
அல்லா வளம்
பொருளாதார
வளம்
•
வரையறுக்கப்பட்டதும்,
அருமைத் தன்மையுடையதுமான வளங்கள், பொருளாதார வளங்கள் ஆகும்.
•
இவை
அருமைத் தன்மையுடைய வளங்களாக இருப்பதனால் இவற்றினை பயன்படுத்தும்போது அமையச் செலவு ஏற்படும்.
(உ – ம்) : நிலம், உழைப்பு,
மூலதனம், முயற்சி
இதன் பண்புகள்
1.
வரையறுக்கப்பட்ட
அருமைத் தன்மையுடையவை.
2.
மாற்றுப்பயன்பாடு
உடையவை.
3.
அமையச்
செலவுடையவை.
பொருளாதாரம் அல்லா வளம்
இயற்கையிடம்
இருந்து பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட வளங்கள் ஆகும்.
இவை அருமைத் தன்மை அற்றவையாக
இருப்பதனால் அமையச் செலவு இவற்றினை
பயன்படுத்தும் போது ஏற்படுவது இல்லை.
(உ – ம்) : சூரிய
ஒளி, காற்று
இதன் பண்புகள்
1.
வரையறையற்றவை
அருமைத்தன்மையற்றவை.
2.
மாற்றுப்பயன்பாடு
அற்றவை.
3.
அமையச்செலவு
அற்றவை.
1.2.3 -பொருளியலாளர்கள்
வளங்களை நுகர்வுத்தன்மை அடிப்படையில்
01) புதுப்பிக்கக்
கூடிய வளம் (Renewable Resource
உதாரணம:-(நீர்,வளி)
02) புதுப்பிக்க
முடியாத வளம் (Non-renewable Resource)
உதாரணம்:-
(கனிமம்,காடுகள்)
என வகைப்படுத்துவர்.
1.2.3-1-மீள உருவாக்கக்கூடிய வளம்
பயன்படுத்தும்போது
இழக்கப்படாததும், குறைந்து விடாததும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதுமானதும், இயற்கையினால் வழங்கப்படும் வளங்களும் இவை ஆகும்.
(உ – ம்) : காட்டுவளம், மீன்வளம்,
சூரிய ஒளி
1.2.3.2 -மீள உருவாக்க முடியாத வளம்
பயன்பாட்டின்
போது இழக்கப்படுகின்றதும், குறைவடைகின்றதும், மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாதவாறும், இயற்கையினால் வழங்கப்பட்ட வளங்கள் இவை ஆகும்.
(உ – ம்) : பெற்றோலிய வளம்,
நிலக்கரி.
இயற்கைவள பாதுகாப்பின் முக்கியத்துவங்கள்
இயற்கைவள பாதுகாப்பின் முக்கியத்துவங்கள்
உயிர்கள்
படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே
படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடே அத்தனை
உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது. மனிதர்கள் சிந்திக்கத்
தொடங்கினார்கள். இயற்கை வளங்களைப் பயன்படுத்தத்
தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது.
தனிமனித உடைமைப் போக்குகள் உருவானது.
அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதருக்கு மட்டுமே
பூமி என்ற நிலை உருவானது.
அதுவும் மாறி, அறிவியல் வளர்ச்சியடைந்த
நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம்
யாவும் சொந்தம் என்ற நிலை
உருவாகியுள்ளது.
உலகிலுள்ள
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு
காணவும், அதனால் ஏற்படும் சவால்களை
உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே
இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை
நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள்
கொண்டாடப்படுகிறது.
மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம்,
வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்துவிட்டன. சீக்கிரமே, வாழ முடியாத இடமாக பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது. வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு,
மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்துபோன நிலையில், இனி எத்தனை தலைமுறைகள் இந்த பூமியைப் பார்க்குமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணியிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள்,
மண் வளம், மேகங்கள், ஏன் ஒவ்வொரு மழைத்துளியும்கூட இயற்கையின் கொடைதான். இதில், ஒன்றை இழந்துகூட மனிதர்கள் வாழவே முடியாது. வாழ அவசியமான எல்லாவற்றையும் அழித்துவிட்டு யாரோடு, எதனோடு வாழப்போகிறார்களோ தெரியவில்லை.
இயற்கையை நேசிப்பது மட்டுமல்ல, அதைப் பாதுகாப்பதும் அவசியம். இது கடமை மட்டுமல்ல, பொறுப்பும்கூட. உங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்துவையுங்கள். இயற்கை வளங்களின் இன்றியமையாமைகுறித்து மக்களிடையே விழிப்பு உணர்வை உண்டாக்க, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28-ம் நாள் உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், இயற்கையைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்வோம். அதுவே, இந்த நாளுக்கான நமது மரியாதை என்று சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக