
- முகப்பு
- அலகு-1
- 1.1-A -பொருளியல் என்றால் என்ன?
- 1.1.B-பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
- 1.1.C .1-செல்வ இலக்கணம்-அடம் ஸ்மித்
- 1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
- 1.1.C.2.aஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது
- 1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்)
- 1.1.C.4.-நவீன பொருளாதார இலக்கணம்
- 1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
- பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்
- 1.1.E.1 .நேர்ப்பொருளியலும் நியமப்பொருளியலும்
- 1.2.1-மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
- 1.2.2-இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள்/a>
- 1.2.3.வளங்கள் என்றால் என்ன?
- 1.3.1 .உற்பத்திக்காரணிகள்
- 1.4.அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்-அருமை மற்றும் தெரிவு
- 1.5-அடிப்படை பொருளாதார பிரச்சனைகள்
- 1.6-& 1.7 அடிப்படை பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகள்&
- 1.8 -உற்பத்தி சாத்திய வளையி அடிப்படையில் அமையச்செலவு விளக்கம்
- 1,9-உற்பத்தி சாத்திய வளையியும் அடிப்படை எண்ணக்கருக்களும்
- அலகு-2
- 2.1கேள்விக்கோட்பாடு/விதி
- 2.2 கேள்வித்தொகை மாற்றமும் கேள்வி மாற்றமும்
- 2.3 கேள்வி நெகிழ்ச்சினை வரைவிலக்கணப்படுத்தி விலை சார் கேள்வி நெகிழ்ச்சியினை விளக்குவர்
- 2.4-விலைசார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்கள்-நுகர்வோன் செலவு-விலைசார் கேள்விநெகிழ்ச்சியின் முக்கியத்துவம்
- 2.5 -CED குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி /a>
- 2.6 வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
- 2.7-2.9நிரம்பல் வரைவிலக்கணம்-நிரம்பல் சார்பு-நிரம்பல் -.விதி- நிரம்பலினை நிர்ணாயிக்கும் காரணிகள்<./li>
- 2.10-2.12 -சந்தை- மார்க்கட்/Market
- 2.12 -சந்தை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
வெள்ளி, 31 மே, 2019
வியாழன், 30 மே, 2019
1.3.1 .உற்பத்திக்காரணிகள்
நிலம் –
- • இயற்கையின் வளம்.
- • அசையும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது.
- • நிரம்பல் நெகிழ்வற்றது.
- • வினைதிறனை உயர்த்தலாம்.
- • நிலத்துக்கான காரணிக்கொடுப்பனவு (விலை) வாடகையாகும்.
(உ – ம்) : காற்று, சூரிய ஒளி
உழைப்பு –
- • உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.
- • அசையும் தன்மையுடையது.
- • ஓரினத் தன்மையற்றது.
- • கல்வி, பயிற்சி, அனுபவம் போன்றவற்றில் உழைப்பின் விளைதிறனை உயர்த்தலாம்.
- • உழைப்பை உடமையாளரிடம் இருந்து பிரிக்க முடியாது.
- • உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.
(உ – ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனை, முகாமையாளர் சேவை.
1.2.3.வளங்கள் என்றால் என்ன?
1.2.3.1-உற்பத்திக்கு
பயன்படும் உள்ளீடுகள் அனைத்தும் உற்பத்தி வளங்கள் ஆகும்.
பொருளியலில்
இவை இரு வகைப்படும்.
1.
பொருளாதார
வளம்
2.
பொருளாதாரம்
அல்லா வளம்
பொருளாதார
வளம்
•
வரையறுக்கப்பட்டதும்,
அருமைத் தன்மையுடையதுமான வளங்கள், பொருளாதார வளங்கள் ஆகும்.
•
இவை
அருமைத் தன்மையுடைய வளங்களாக இருப்பதனால் இவற்றினை பயன்படுத்தும்போது அமையச் செலவு ஏற்படும்.
(உ – ம்) : நிலம், உழைப்பு,
மூலதனம், முயற்சி
இதன் பண்புகள்
1.2.2 .பொருள் /பண்டம்
இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள் என வகைப்படுத்தப்படுகிறது.
இலவசப் பண்டம் / கட்டில்லாப் பண்டம் / பொருளாதாரம் அல்லாப் பண்டம் /சிக்கனப்பண்டம்
1. இயற்கையிடமிருந்து விலையின்றி பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவு இன்றியும், கிடைப்பனவு அருமையற்றவையாகவும் காணப்படும்.
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவற்றது.
2. அருமையற்றவை.
3. இயற்கையின் கொடையாக / பூச்சிய விலையில் பூரண நிரம்பலாக காணப்படும்.
4. வளப்பயன்பாட்டு செலவு அற்றது.
5. நுகர்வில் போட்டியற்றது.
.
பொருளாதாரப் பண்டம் /சிக்கனப்பண்டம்
.
1. பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவுடைய, கிடைப்பனவு அருமைத்தன்மையாக காணப்படும் பண்டங்கள் ஆகும்.
(உ – ம்) : இலவசக் கல்வி, உணவு.
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவுடையது.
2. அருமையானவை.
3. மனித முயற்சியால் உருவானது.
4. வளப்பயன்பாட்டு செலவு உடையது.
5. நுகர்வில் போட்டிக்குரியது.
இலவசப் பண்டம் / கட்டில்லாப் பண்டம் / பொருளாதாரம் அல்லாப் பண்டம் /சிக்கனப்பண்டம்
1. இயற்கையிடமிருந்து விலையின்றி பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவு இன்றியும், கிடைப்பனவு அருமையற்றவையாகவும் காணப்படும்.
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவற்றது.
2. அருமையற்றவை.
3. இயற்கையின் கொடையாக / பூச்சிய விலையில் பூரண நிரம்பலாக காணப்படும்.
4. வளப்பயன்பாட்டு செலவு அற்றது.
5. நுகர்வில் போட்டியற்றது.
.
பொருளாதாரப் பண்டம் /சிக்கனப்பண்டம்
.
1. பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற பண்டங்கள் ஆகும்.
2. அதாவது அமையச் செலவுடைய, கிடைப்பனவு அருமைத்தன்மையாக காணப்படும் பண்டங்கள் ஆகும்.
(உ – ம்) : இலவசக் கல்வி, உணவு.
.
இதன் பண்புகள்
1. அமையச் செலவுடையது.
2. அருமையானவை.
3. மனித முயற்சியால் உருவானது.
4. வளப்பயன்பாட்டு செலவு உடையது.
5. நுகர்வில் போட்டிக்குரியது.
1.2.1.மனித தேவைகளும் விருப்பங்களும் வேறுபாடு
தேவைகள் (NEEDS)
மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
• இது உயிரியல் விஞ்ஞான ரீதியானது.
• இது வரையறுக்கப்பட்டது.
• எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
.
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
• இது வரையறுக்கப்படாதது.
• நபருக்கு நபர் வேறுபடும்.
• சமூக கலாச்சார காரணிகளுடன் தொடர்புடையது.
பொருளாதாரத் தேவைகள் – பொருளாதாரம் அல்லாத் தேவைகள்
பொருட்கள், சேவைகள் மூலம் நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரத் தேவைகள் எனவும்
பொருட்கள், சேவைகள் அல்லாத உளரீதியாக நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரம் அல்லாத் தேவைகள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றன.
பொருளியலில் பொருளாதாரத் தேவைகளே ஆராயப்படுகின்றன.
மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
• இது உயிரியல் விஞ்ஞான ரீதியானது.
• இது வரையறுக்கப்பட்டது.
• எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
.
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
• இது வரையறுக்கப்படாதது.
• நபருக்கு நபர் வேறுபடும்.
• சமூக கலாச்சார காரணிகளுடன் தொடர்புடையது.
பொருளாதாரத் தேவைகள் – பொருளாதாரம் அல்லாத் தேவைகள்
பொருட்கள், சேவைகள் மூலம் நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரத் தேவைகள் எனவும்
பொருட்கள், சேவைகள் அல்லாத உளரீதியாக நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரம் அல்லாத் தேவைகள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றன.
பொருளியலில் பொருளாதாரத் தேவைகளே ஆராயப்படுகின்றன.
1.1.E .The Major Differences between Micro and Macroeconomics are mentioned below: பேரினப்பொருளியல் நுண்பாக/சிற்றினப் பொருளியல்இரண்டிற்க்கும் இடையிலான பிரதான வேறுபாடுகள் 10
1. The word ‘Micro’ means small. It is a study of individuals or groups. According to Shapiro “Microeconomics deals with small parts of the economy.” It is a piece meal study. On the other hand, ‘Macro’ means large. It is a study of economy as a whole.
மைக்ரோ என்பது சிறு என்ற அர்த்தத்தை கொடுக்கும், இது தனி நபர்,குளு,சார்ந்த ஒரு படிப்பினையாகும், Shapiro “Microeconomics deals with small parts of the economy.”,அதாவது சார்பிரோ என்பவரது கருத்துப்படி,சிற்றின பொருளியல் என்பது பொருளாதாரத்தின் சிறு பகுதிகளை நோக்கி ஆராய்வதாகும். It is a piece meal study இது ஒரு சாப்பாட்டின் ஒரு பகுதியை ஆய்வது போன்றது.
ஆனால் மாக்ரோ என்பது பெரிய என அர்த்தப்படும்,இது ஒரு பொருளாதாரத்தை முளுமையாக நோக்கி ஆராய்வதாகும்
2. Microeconomics is a study of particular households, particular firms, particular industries, particular commodities, particular prices etc. On the other hand, Macroeconomics deals with aggregate of these quantities, not with individual incomes but with the national income, not with individual prices but with the price level, not with individual output but with the national output.
1.1.D .பொருளியலை கற்பதன் நோக்கம் /முக்கியத்துவம்
1. இதனை கற்பதனால் ,எப்படி பொருளாதார ரிதியான முடிவுகளினை மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டுகின்றது
2. சமூகத்தினை புரிந்துகொள்ள உதவியாயிருக்கிறது
3. உலகலாவிய நிறுவனங்களின் ,அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகளினை அறிய ,விளங்கிக்கொள்ள உதவுகின்றாது
4. ஒரு அறிவார்ந்த நாட்டுப்பிரஜையாக வாழ உதவுகின்றாது.
5. ஏனெனில் ஒரு அறிவார்ந்த நாட்டு பிரஜை கட்டாயமாக பொருளியலறிவை கொண்டிருக்க வேண்டும்.
உங்களுக்கு விரும்பிய உதாரணங்களை ஓரிரு வசனங்களில் எழுதலாம்,நேரம் இருப்பின்
2. சமூகத்தினை புரிந்துகொள்ள உதவியாயிருக்கிறது
3. உலகலாவிய நிறுவனங்களின் ,அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகளினை அறிய ,விளங்கிக்கொள்ள உதவுகின்றாது
4. ஒரு அறிவார்ந்த நாட்டுப்பிரஜையாக வாழ உதவுகின்றாது.
5. ஏனெனில் ஒரு அறிவார்ந்த நாட்டு பிரஜை கட்டாயமாக பொருளியலறிவை கொண்டிருக்க வேண்டும்.
உங்களுக்கு விரும்பிய உதாரணங்களை ஓரிரு வசனங்களில் எழுதலாம்,நேரம் இருப்பின்
1.1.C.4.புதுக்கெய்னீசிய பொருளியல்/சாமுவெல்சனின் இலக்கணம் (நவீன பொருளாதார இலக்கணம்)
சாமுவெல்சனின் இலக்கணம் நவீன பொருளாதார இலக்கணமாக கருதப்படுகிறது. மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி சமுதாயம் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பற்றியும், பண்டங்களையும், பணிகளையும் தற்கால், எதிர்கால நுகர்வுக்காக உற்பத்தி செய்கின்றனது என்பது பற்றியும் பயிலும் ஒரு சமூக அறிவியலே பொருளியலாகும்.
இது ஒரு பொதுவான இலக்கணமாகும். இராபின்சன், சாமுவேல்சனின் இலக்கணங்களில் பல பொதுவான கருத்துக்கள் காணப்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளையுடைய பற்றாக்குறையான வளங்களை சமுதாயம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப்பற்றிக் கூறும் சமூக அறிவியலே பொருளியல் ஆகும் என்று சாமுவெல்சன் இலக்கணம் வகுத்துள்ளார். இவை அனைத்தும் இராபின்சனின்
இது ஒரு பொதுவான இலக்கணமாகும். இராபின்சன், சாமுவேல்சனின் இலக்கணங்களில் பல பொதுவான கருத்துக்கள் காணப்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளையுடைய பற்றாக்குறையான வளங்களை சமுதாயம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப்பற்றிக் கூறும் சமூக அறிவியலே பொருளியல் ஆகும் என்று சாமுவெல்சன் இலக்கணம் வகுத்துள்ளார். இவை அனைத்தும் இராபின்சனின்
1.1.C.3 .கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் (இலயனல் ராபின்ஸ்) (Lionel Robbins Scarcity Definition):
இலயனல் ராபின்ஸ் அவர்கள் பொருளியலுக்கு கீழ்கண்டவாறு இலக்கணம் வரையறுத்துள்ளார்.
"விருப்பங்களோடும், கிடைப்பருமையுள்ள, மாற்று வழிகளில் பயன் படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கை களைப்பற்றி பயிலுகின்ற அறிவியலே பொருளியலாகும்".
பேராசிரியர் இலயனல் ராபின்சன் “பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை”
"விருப்பங்களோடும், கிடைப்பருமையுள்ள, மாற்று வழிகளில் பயன் படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கை களைப்பற்றி பயிலுகின்ற அறிவியலே பொருளியலாகும்".
பேராசிரியர் இலயனல் ராபின்சன் “பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும் பற்றிய ஒரு கட்டுரை”
1.1.C.2,.ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் ஏன் சிறந்தது ?
ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விட மார்ஷலின் நல இலக்கணம் சிறந்தது என்றால் மிகையாகாது. சமூகப் பிரச்சனைகளுக்கு இது முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல் ஆகும். அது மட்டுமன்றி, செல்வத்துக்கும் பொருள்சார் நலனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பொருளியல் ஓர் அறிவியல். அது பொருள்சார் நலனைப் பற்றியது என்ற மார்ஷலின் மையக் கருத்தை இலயனல் இராபின்ஸ் கடுமையாக குறை கூறினார். அரசியல் பொருளாதாரத்தை தவறாக கையாண்டுள்ளதாக மார்ஷலை இராபின்ஸ் குறை கூறுகின்றார்.
1. முதலாவதாக பொருள்சார் நலனை உயர்த்தும் நடவடிக்கைகளை மட்டும் பொருளியல் ஆராய்கிறது. ஆனால் பல நடவடிக்கைகள் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. ஆனால் அவை பொருளியல் நடவடிக்கைகளாக
1. முதலாவதாக பொருள்சார் நலனை உயர்த்தும் நடவடிக்கைகளை மட்டும் பொருளியல் ஆராய்கிறது. ஆனால் பல நடவடிக்கைகள் பொருள்சார் நலனை உயர்த்துவது இல்லை. ஆனால் அவை பொருளியல் நடவடிக்கைகளாக
1.1.C.2 .பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் ஆல்பிரடு மார்ஷல்
ஆல்ஃபிரடு மார்ஷலின் (1842-1924) நல இலக்கணம் (Welfare Economics)
1890 ஆம் ஆண்டு ஆல்ஃபிரடு மார்ஷல் பொருளாதார கோட்பாடுகள்' என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் அன்றாட வாழ்க்கையில் மனித இனத்தைப் பற்றிப் பொருளியல் ஆராய்கிறது என்று வரையறுத்துள்ளார்
. "சாதாரண மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது”
பொருளியல் செல்வத்தைப் பற்றி ஆராய்கிறது என்பதை மார்ஷல் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் பொருளியல் செல்வத்தைப் பற்றி மட்டுமே ஆராய்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பொருளியல் ஒரு பக்கம் செல்வத்தைப் பற்றியும், அதைவிட முக்கியமாக மற்றொரு பக்கம் மனிதனைப் பற்றியும் ஆய்வு செய்கின்ற இயல். அவருடைய மையக் கருத்து மனிதனைப் பற்றியதே. செல்வத்தைப் பற்றி ஆராய்வதைவிட மனிதனைப் பற்றி ஆராய்வதே இன்றியமையாததாக கருதுகின்றார்.
பொருளியல் மனித இனத்தின் அனைத்து நடவடிக்கை களையும் ஆராயவில்லை . மனிதனை வாங்குபவர் -விற்பவராகவும், உற்பத்தியாளர்-நுகர்வோராகவும், சேமிப்பாளர்- முதலீட்டாளராகவும், முதலாளி-தொழிலாளியாகவும் “பொருளியல் ஆராய்வதாக கெயின்கிராஸ், (Caincross) கூறுகின்றார்.
மக்கள் வருமானத்தை எவ்வாறு பெறுகிறார்கள். அவற்றை எவ்வாறு, பயன் படுத்துகிறார்கள், வளங்களை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் உபயோகப் படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது.
“பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது” என்பதைப் பற்றி, ஆராய்கிறது. பொருள்சார் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால், பொருள்சார் நல இயலாக பொருளியல் ஆயிற்று.
1890 ஆம் ஆண்டு ஆல்ஃபிரடு மார்ஷல் பொருளாதார கோட்பாடுகள்' என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் அன்றாட வாழ்க்கையில் மனித இனத்தைப் பற்றிப் பொருளியல் ஆராய்கிறது என்று வரையறுத்துள்ளார்
. "சாதாரண மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது”
பொருளியல் செல்வத்தைப் பற்றி ஆராய்கிறது என்பதை மார்ஷல் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் பொருளியல் செல்வத்தைப் பற்றி மட்டுமே ஆராய்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பொருளியல் ஒரு பக்கம் செல்வத்தைப் பற்றியும், அதைவிட முக்கியமாக மற்றொரு பக்கம் மனிதனைப் பற்றியும் ஆய்வு செய்கின்ற இயல். அவருடைய மையக் கருத்து மனிதனைப் பற்றியதே. செல்வத்தைப் பற்றி ஆராய்வதைவிட மனிதனைப் பற்றி ஆராய்வதே இன்றியமையாததாக கருதுகின்றார்.
பொருளியல் மனித இனத்தின் அனைத்து நடவடிக்கை களையும் ஆராயவில்லை . மனிதனை வாங்குபவர் -விற்பவராகவும், உற்பத்தியாளர்-நுகர்வோராகவும், சேமிப்பாளர்- முதலீட்டாளராகவும், முதலாளி-தொழிலாளியாகவும் “பொருளியல் ஆராய்வதாக கெயின்கிராஸ், (Caincross) கூறுகின்றார்.
மக்கள் வருமானத்தை எவ்வாறு பெறுகிறார்கள். அவற்றை எவ்வாறு, பயன் படுத்துகிறார்கள், வளங்களை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் உபயோகப் படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது.
“பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது” என்பதைப் பற்றி, ஆராய்கிறது. பொருள்சார் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால், பொருள்சார் நல இயலாக பொருளியல் ஆயிற்று.
1.1.C .1.செல்வம் பற்றி ஆராயும் இயல் அடம்ஸ்மித்/செல்வ இலக்கணம் : (அடம் ஸ்மித்) (Adam Smith)
ஆடம் ஸ்மித் (1723-90) பொருளியலின் இலக்கணத்தைக் வரையறுத்துள்ளார்.
“பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்”, 1776 ஆம் ஆண்டில் "தேசங்களின் செல்வம்” என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
அவர் அரசியல் பொருளியலின் தந்தை எனப்படுகிறார். ஏனெனில், இவரே முதன்முதலில் அனைத்துப் பொருளியல் கருத்துக்களையும் முறையாக ஒருங்கிணைத்தவர் ஆவார். அடம் ஸ்மித்துக்குப் பிறகே பொருளியலை நாம் முறைபடுத்தப்பட்ட அறிவியலாகப் பயில்கிறோம்.
பொருளியலில் 'செல்வம்' சிறப்பிடத்தைப் பெறுகிறது. பொதுவாக செல்வம் என்பது பணத்தைக் குறிக்கும். பொருளியலில் மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் செல்வம்' எனப்படும். ஆனால், மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் செல்வமாகக் கருதப்பட மாட்டா என்பதை
“பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்”, 1776 ஆம் ஆண்டில் "தேசங்களின் செல்வம்” என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
அவர் அரசியல் பொருளியலின் தந்தை எனப்படுகிறார். ஏனெனில், இவரே முதன்முதலில் அனைத்துப் பொருளியல் கருத்துக்களையும் முறையாக ஒருங்கிணைத்தவர் ஆவார். அடம் ஸ்மித்துக்குப் பிறகே பொருளியலை நாம் முறைபடுத்தப்பட்ட அறிவியலாகப் பயில்கிறோம்.
பொருளியலில் 'செல்வம்' சிறப்பிடத்தைப் பெறுகிறது. பொதுவாக செல்வம் என்பது பணத்தைக் குறிக்கும். பொருளியலில் மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் செல்வம்' எனப்படும். ஆனால், மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களும் செல்வமாகக் கருதப்பட மாட்டா என்பதை
1.1.B .Economics as a Social Science 1.1.B -பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானமாக கருதப்படுகிறது?
Economics as a Social Science
பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானமாக கருதப்படுகிறது?
பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
சமூக விஞ்ஞானங்கள் மனித நடத்தைகளை பற்றி ஆய்வு செய்கின்றன,பொருளியல் மனிதனின் பொருளாதார நடத்தை பற்றி ஆய்வு செய்கின்றது.எனவே பொருளியல் சமூக விஞ்ஞானம் ஆகும்.அது மட்டுமன்றி பொருளியலில் இருக்கின்ற ஆய்வுமுறைகள்
1. பொருளியல் ஆய்வு முறைகள் (Methods of Economic Analysis)
பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகள் உள்ளன.
1, பகுத்தாய்வு முறை (Deductive)
2, தொகுத்தாய்வு முறை (Inductive Method)பகுத்தாய்வு முறையை, பகுத்தறியும் முறை என்றும், (Analytical) கருத்தியலான முறை (Abstract) என்றும் கூறுவதுண்டு. இது முன்நிலைச் சார்பு முறையைச் சார்ந்தது. சில அடிப்படை எடுகோள்களிலிருந்து முடிவுகள் பெறப்படுகின்றன. கிரேக்கர்களிடையே இம்முறை மிகவும் பிரபலமானது.
பகுத்தாய்வு முறையானது. பொதுக்கருத்திலிருந்து தனிக் கருத்தைப் பெறுவது ஆகும். தொன்மைப் பொருளியல் அறிஞரான ரிகார்டோ பகுத்தாய்வு முறையைப் பின்பற்றினார்.
தொகுத்தாய்வு முறையானது (Inductive Method) தனிக் கருத்திலிருந்து பொதுக் கருத்தைப் பெறுவதாகும். டார்வினின் தொகுத்தாய்வு, பகுத்தாய்வு முறைகளின் முக்கிய கருத்துக்களாவன
1, பிரச்சனைகளை அறிதல் (Identification) 2, அனுமானங்களை உருவாக்குதல் 3. புள்ளி விவரங்களைச் சேகரித்தல், தொகுத்தல், ஆராய்தல்4. முடிவுகளைப் பெறுதல். 5, சரிபார்த்தல், நீக்குதல், அல்லது திருத்தி அமைத்தல்
2. பொருளியல் ஏனைய சமூக விஞ்ஞானங்களோடு தொடர்புபஉதுகின்றது.,
உதாரணம் அரசியல் ,அரசியல் பொருளாதாரம்,சமூகவியல்,உளவியல்,பொருளாதார உளவியல்
3. மற்ற சமூக அறிவியல்களைப் போன்று பொருளியலும் அதற்குரிய விதிகளைக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், கொடுக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு, என்ன நடக்கவேண்டும் என்று கூறும் கூற்றே விதியாகும். நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு விளைவை ஏற்படுத்தும்.
உதாரணம் .- விலை கூடும் போது கேள்வி தொகை குறையும்
4. சராசரி மனித நடவடிக்கைகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம்
பொருளியல் விதிகள் இயல்பியல் விதிகளைப் போன்று துல்லியத்தன்மை உடையன அல்ல. ஆனால் சராசரி மனித நடவடிக்கைகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.அதாவது சராசரி தனி நபர் வருமானம் எவ்வாறு ஒரு நபரின் பொருளாதார நடத்தையினை தீர்மானிக்கும்,வறுமைக்கோடு மற்றும் அரசின் பொருளாதார நடத்தை என்பன எவ்வாறு அமையும் என தீர்மானிக்கும்.
5. அளவியில் பொருளாதாரம் (Econometrics) என்ற புதிய அறிவியல் பாடப்பகுதி பொருளியலில் பிரிவில் உள்ளது. புள்ளியியலையும், கணித இயலையும் பயன்படுத்துகிறோம்
உதாரணமாக அட்டவனைகள்,கணித சமன்பாடுகள்
Qdx=f(Px)
6. எதிர்வுகூறல்களினை மேற்கொள்ளல்.
உதாரணம்,அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையின் வறுமை நிலை இல்லாதொழிக்கபடலாம்.
பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானமாக கருதப்படுகிறது?
பொருளியல் ஏன் ஒரு சமூக விஞ்ஞானம்?
சமூக விஞ்ஞானங்கள் மனித நடத்தைகளை பற்றி ஆய்வு செய்கின்றன,பொருளியல் மனிதனின் பொருளாதார நடத்தை பற்றி ஆய்வு செய்கின்றது.எனவே பொருளியல் சமூக விஞ்ஞானம் ஆகும்.அது மட்டுமன்றி பொருளியலில் இருக்கின்ற ஆய்வுமுறைகள்
1. பொருளியல் ஆய்வு முறைகள் (Methods of Economic Analysis)
பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகள் உள்ளன.
1, பகுத்தாய்வு முறை (Deductive)
2, தொகுத்தாய்வு முறை (Inductive Method)பகுத்தாய்வு முறையை, பகுத்தறியும் முறை என்றும், (Analytical) கருத்தியலான முறை (Abstract) என்றும் கூறுவதுண்டு. இது முன்நிலைச் சார்பு முறையைச் சார்ந்தது. சில அடிப்படை எடுகோள்களிலிருந்து முடிவுகள் பெறப்படுகின்றன. கிரேக்கர்களிடையே இம்முறை மிகவும் பிரபலமானது.
பகுத்தாய்வு முறையானது. பொதுக்கருத்திலிருந்து தனிக் கருத்தைப் பெறுவது ஆகும். தொன்மைப் பொருளியல் அறிஞரான ரிகார்டோ பகுத்தாய்வு முறையைப் பின்பற்றினார்.
தொகுத்தாய்வு முறையானது (Inductive Method) தனிக் கருத்திலிருந்து பொதுக் கருத்தைப் பெறுவதாகும். டார்வினின் தொகுத்தாய்வு, பகுத்தாய்வு முறைகளின் முக்கிய கருத்துக்களாவன
1, பிரச்சனைகளை அறிதல் (Identification) 2, அனுமானங்களை உருவாக்குதல் 3. புள்ளி விவரங்களைச் சேகரித்தல், தொகுத்தல், ஆராய்தல்4. முடிவுகளைப் பெறுதல். 5, சரிபார்த்தல், நீக்குதல், அல்லது திருத்தி அமைத்தல்
2. பொருளியல் ஏனைய சமூக விஞ்ஞானங்களோடு தொடர்புபஉதுகின்றது.,
உதாரணம் அரசியல் ,அரசியல் பொருளாதாரம்,சமூகவியல்,உளவியல்,பொருளாதார உளவியல்
3. மற்ற சமூக அறிவியல்களைப் போன்று பொருளியலும் அதற்குரிய விதிகளைக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், கொடுக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு, என்ன நடக்கவேண்டும் என்று கூறும் கூற்றே விதியாகும். நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு விளைவை ஏற்படுத்தும்.
உதாரணம் .- விலை கூடும் போது கேள்வி தொகை குறையும்
4. சராசரி மனித நடவடிக்கைகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம்
பொருளியல் விதிகள் இயல்பியல் விதிகளைப் போன்று துல்லியத்தன்மை உடையன அல்ல. ஆனால் சராசரி மனித நடவடிக்கைகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.அதாவது சராசரி தனி நபர் வருமானம் எவ்வாறு ஒரு நபரின் பொருளாதார நடத்தையினை தீர்மானிக்கும்,வறுமைக்கோடு மற்றும் அரசின் பொருளாதார நடத்தை என்பன எவ்வாறு அமையும் என தீர்மானிக்கும்.
5. அளவியில் பொருளாதாரம் (Econometrics) என்ற புதிய அறிவியல் பாடப்பகுதி பொருளியலில் பிரிவில் உள்ளது. புள்ளியியலையும், கணித இயலையும் பயன்படுத்துகிறோம்
உதாரணமாக அட்டவனைகள்,கணித சமன்பாடுகள்
Qdx=f(Px)
6. எதிர்வுகூறல்களினை மேற்கொள்ளல்.
உதாரணம்,அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையின் வறுமை நிலை இல்லாதொழிக்கபடலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)