சனி, 20 ஏப்ரல், 2019

மனிதனின் பொருளாதார நடத்தைகள் என்றால் என்ன? பொருளியல் ஏன் சமூக விஞ்ஞானம்?


மனிதனின் பொருளாதார நடத்தைகள் என்றால் என்ன?
பொருளியல் ஏன் சமூக விஞ்ஞானம்?
பொதுவாக மனித நடத்தை பற்றி ஆய்வு செய்யும் துறை உளவியலாகும்,மனிதனின் பொருளாதார நடத்தை பற்றி ஆய்வு செய்யும் துறை பொருளியலாகும்.
மனிதனின் பொருளாதார நடத்தைகள் என்பவை கொள்வனவு செய்தல் ,விற்பனை செய்தல்,வருமானமீட்டல்,செலவு செய்தல்,உற்பத்தி செய்தல்,முதலீடு செய்தல்,கடன் படுதல் மற்றும் வள ஒதுக்கீடு செய்தல்,எதனை எந்தளவு எவ்வாறு யாருக்காக உற்பத்தி செய்தல் என்ற தீர்மானங்களினை எடுத்தல்,பொருளாதாரத்தை திட்டமிடல்,நிர்வகித்தல்,எதிர்கால பொருளாதார தீர்மானங்களினை மேற்கொள்ளுதல்,வெளிநாட்டு பொர்ளாதார இறக்குமதி ,மற்றும் ஏற்ருமதி,வெளிநாட்டு முதலீடுகள் செய்தல்...இப்படி பலதரப்பட்ட விடயங்களினை உள்ளடக்கியதாகும்
அருமையானதும், மாற்றுப் பயன்பாடுகளைக் கொண்டதுமான வளங்களைக் கொண்டு வரையறையற்ற விருப்பங்களை நிறைவேற்ற முயலும் மனித நடத்தை பற்றி ஆராயும் இயல் பொருளியல் ஆகும்.
பொருளியல் மனிதனுடைய நடத்தை பற்றி ஆய்வு செய்வதனால் சமூக விஞ்ஞானம் எனப்படுகிறது.
 பொருளியல்
ஆய்வு கூட பரிசோதனைக்கு உட்படாது.
 பொருளியலின் முடிவுகள் நிச்சயத்தன்மை குறைந்தவை, காலநிலை புவியியல் சனத்தொகை அமைப்புக்களுக்கேற்ப மாறுபடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக